வெள்ளி, 2 மே, 2014

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - காற்று அடைத்த பை...! (Mano Red)

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - காற்று அடைத்த பை...! (Mano Red)



தான தர்மம் ஏதுமின்றி
தாய் கொடுத்த உடல்,
தீயில் தீய்ந்து போன பின்னும்
தாய் மண் தான் தின்ன வேண்டுமா...??

அமுதம் தின்ற
அழகிய அழகு உடலும்,
அழகில்லாத அசிங்க உடலும்,
அழுகிப் போவது நிச்சயம்...!!

நாள் கடந்து போனால்
தோல் உடம்பு தின்ன,
பருந்துகள் வட்டமிடும்
புழுக்கள் உடல் புகுந்து விடும்...,!!

எமனும் அவன்
எருமை மாடும் வருவதற்கு
எந்த கால நேரமும் கிடையாது
எதிர்பாராமல் எப்போதும் வருவான்..!!

உடலின் உயிரில்
உணர்ச்சி உள்ளாடும் போதே,
உயிருடன் உடல் கிழிக்காமல்
உடல் தானம் செய்யலாமே...??

மனித உறுப்புகள்
மக்கி மண்ணாகி போகாமல்,
மண்ணில் கொஞ்ச காலம்
மகிழ்ந்து தான் பார்க்கட்டுமே...!!

காற்று நிரம்பிய
வெற்று உடம்பு
கழுகுக்கு உணவாகாமல்,
காலம் கடந்து உலகம் சுற்ற
உடல் தானம் செய்வோம்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக